வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Aug 12, 2022

குறுகிய இந்த உலக வாழ்க்கையில்...

குறுகிய இந்த உலக வாழ்க்கையில்... 

*குழப்பமும், கவலையுமான நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்...

*மனசு சரியில்லை என்றால் குழந்தைகளிடம் பேசுங்க...

*திருமணம் ஆகிவிட்டால் உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், திருமணம் ஆகவில்லை என்றால் பெண்களை நேசியுங்கள், அவர்களை மதியுங்கள்.,.

*ஆசைப்பட்டது கிடைக்க சில தியாகங்கள் செய்ய நினைத்திடுங்க...

*பொறுமை, நேர்மை, உழைப்பு, இது மூன்றும் வெற்றிக்காண வழி அதை நிலை நிறுத்துங்க...

*கிடைத்த வேலையை ஆசையுடன் செய்து பழக நினைத்திடுங்க...

*உங்களை மதிக்காத இடத்தில் உங்களின் நிழலை கூட நிற்க அனுமதிக்காதீக...

*உங்களை மதிக்கும் இடத்தில் உண்மையுடனும், நேர்மையுடன் நடந்திடுங்க...

*இவ்வுலகில் பணம்தான் எல்லாம் ஆகிவிட்டது, திருமணம் ஆகிவிட்டாலும் திருமணம் ஆகாவிட்டாலும், சேமிக்கும் பழக்கத்தை கைவிடாதீங்க...

*சேமிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க...

*உதவி, மற்றும் தர்மம் செய்வதை மறக்காதீங்க...

*உதவியின் பலனையும், தர்மத்தின் சிறப்பையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திடுங்க...

*வறுமானத்திற்கு மீறிய செலவை விரும்பாதீங்க...

*இரண்டு வழியில் வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் அல்லது வேலையை செய்திடுங்க...

*உங்களுடைய ஆசையையும் உங்களின் மனைவி மக்களின் ஆசைகளையும், அவர்களின் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றிடுங்க அதில் கஞ்சத்தனம் காட்டாதீங்க...

*மகிழ்ச்சியில் யோசிக்காமல் எந்த வாக்குகளையும் கொடுத்துடாதீங்க,

*வாக்கு கொடுத்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்க, அப்போதுதான் நீங்கள் அவர்களிடத்தில் மதிக்கப்படுவீங்க...

*கோபமும், பேராசையும், ஒரு கொடிய நோய், முடிந்தவரை அதை மனக்கட்டுக்குள் கொண்டு வர முயற்சியுங்கள்...

*பெண்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்...

*பெண்களிடமும், குழந்தைகளிடமும், கவனமாக பேசுங்கள்...

*உலகத்தை நேசியுங்கள், மனிதர்களை மதியுங்கள்...


"இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும், வாழ பழகிக்கொள்ளுங்கள். அல்லது வாழ முயற்சி செய்யுங்கள்...

No comments:

Post a Comment