Oct 25, 2015

நற் சிந்தனைகள்

அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே. உண்மையான அன்புக்கு நம்முள் ஒரு சிறிதாவது இடமிருந்தால் வெகு அழகான பேச்சைவிட அது எவ்வளவோ நலனை நம்மிடத்தும் பிறரிடத்தும் அளிக்க வல்லது.

பார்பர்-

விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

1.ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

2.எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

3.எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

4.செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

5.பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

6.நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

7.நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.

சீனப் பழமொழி- பெருந்தன்மையே முதல் படி
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

பாரதியார்-நற் சிந்தனைகள்
துன்பம் நம்மைத் தீண்டும்போது, கலங்காமல் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள்.அப்படி சிரிக்கத் தொடங்கினால் அந்தச் சிரிப்பே துன்பத்தை வெட்டுகின்ற வாளாக மாறிவிடும்.

* கோயிலுக்குப் போனாலும், போகாவிட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தெய்வத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும் தவறில்லை. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வத்தின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

* தைரியம் இருக்குமிடத்தில் தான் உண்மையான தெய்வபக்தி இருக்கும்.தைரியத்தை வளர்த்துக் கொண்டால் இந்தப் பிறவியிலேயே மனிதன் அழியா இன்பம் பெறுவான்.

* தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காணும் ஆற்றல் இல்லாதவன் மலைச் சிகரத்திற்குச் சென்று தவம் செய்தாலும் கடவுள் காட்சியைப் பெற முடியாது.

* நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் தெய்வத்திடம் உடனே பெற முடியாது.பக்திநிலையில் பக்குவம் பெற்ற பிறகே நம் எண்ணங்கள் ஈடேறத் தொடங்கும்.

* ஒருவன் தனக்குத் தானே நண்பனாக இருந்தால் உலகமே அவனுக்கு நண்பனாகிவிடும்.
பகைவனாக இருப்பவன் இந்த உலகத்தை தனக்கு எதிரியாக்கிவிடுவான்.


பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!

தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்

மூன்று ஆயுதம் நம்மிடம்
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியன்

துணிவே துணை
ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்

வெற்றிக்கு முதல்படி எது?
மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்

(உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது)


உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.
- வால்டேர்

அன்பு அதர்மத்தைக் கூட அடிபணிய வைத்துவிடும். - நெப்போலியன்

அஞ்சா நெஞ்சம் வேண்டும்
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்

நல்ல எண்ணெய் எது?
மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா

ஓய்வு எடுங்கள்
'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு

எளிமைதான் முன்னேற்றம்
எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல்

சூரிய ஒளி போல
யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட்

உண்மை ஒரு கசப்பான மருந்து; ஆனால் அதன் விளைவு இனிமையானது. - அலெக்சாண்டர்

பிரார்த்தனை செய்யலாமா?
இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன்

நல்ல எண்ணமே சிறந்தது
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்)
 

இயற்கை நமது நன்பன்
மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
- அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)

வாழ்வின் வெற்றி

 உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள். அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு. - கவி. தாம்சன்


எது உயிர் மூச்சு?
நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில்

அன்பின் சக்தி
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
- புனித பைபிள் கொரிந்தியர் 1:13

அன்பு மயமாக இருங்கள்
அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ்

மனஉரம் வேண்டும்
கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்

யோசனை கூறும் தகுதி
யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட்

புரிந்துகொள்வது

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்துகொள்வது அவசியம். -அன்னை தெரசா


நேர்மையான பாதையில்
விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும். - புத்தர்

எளிமை
எளிமையைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சி வருகிறது. - கெதே

சீர்திருத்த முயல்கிறார்கள்
எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கிறார்கள் - தாகூர்

அறிவாளி
மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை; அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை. - புத்தர்

எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ, அவனே அறிவாளி. - விவேகானந்தர்

அன்பு
எதன்மேல் நாம் அன்பு செலுத்துகிறோமோ, அதுவே நம்மை உருவாக்குகின்றது. - யொஹன் கேத்தே

உயர்ந்த எண்ணங்களை உடையோர்
உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருநாளும் தனித்தவராகார். - காந்தியடிகள்

படி
உரையாற்றுவதற்காகவோ உபதேசம் செய்வதற்காகவோ படிக்காதே. - ஜேம்ஸ் ஆலன்

நம்புவது and நம்பாமல் இருப்பது
எல்லோரையும் நம்புவது ஆபத்தானது! ஆனால் ஒருவரையும் நம்பாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது! - ஆபிரகாம் லிங்கன்

நட்பு
ஒருவருடன் நட்புக்கொள்ளுமுன் நன்றாக யோசித்து அவருடன் நட்புக்கொள். அந்த நட்பை விலக்க விரும்பினால் மேலும் நன்றாக யோசனை செய்தபின்னரே அதனை நடைமுறைப்படுத்து! - பிராங்ளின்

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. - வோல்டன்

கல்மனம் படைத்த நண்பர்களை விட கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல. - விவேகானந்தர்

ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள் , அவனுடைய பத்து விரல்கள்.
- ராபர்ட் கோலியர்

மாற்றம்
நாம் மனிதர் என்ற முறையில், எங்கள் திறன் உலகை மாற்றி அமைப்பதிலல்ல தங்கியிருக்கின்றது - எங்களை மாற்றி அமைப்பதில்தான் இருக்கின்றது. நாங்கள் உலகில் விரும்பும் மாற்றத்தை, நாங்களே வாழவேண்டும் - மகாத்மா காந்தி

அறியாமை
தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரமாகும்! - ஒல்கோட்

வாழ்க்கை
வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

தலைசிறந்த வாழ்க்கை , உயர்ந்த லட்சியங்களை கொண்டதாய் அமையும். - பைரன்

அடிமை
மனிதனை எது அடிமையாக்குகிறதோ, அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது. - போப்

வயது
முதுமை வயதைப் பொறுத்தது அல்ல. உணர்ச்சியைப் பொறுத்தது. - விவேகானந்தர்

கற்பனை
கற்பனை என்பது அறிவை விட சிறந்தது. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

உழைப்பு
தேவைகளை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நாகரிகம். - காந்திஜி

இதயம்
உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு. - வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

அழுவது
நான் மழையில் நனைவதை விரும்புகிறேன். நான் அழுவது யாருக்கும் தெரியாது என்பதால். - சார்லி சாப்ளின்

முயற்சி
வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய்.
- கதே

தாயன்பு
இறைவனின் அன்புக்கு இணையானது தாயன்பு. - சிரில் கெனானோல்

பிறரது குற்றம்
பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை. - சுவாமி விவேகானந்தர்

நல்ல செயல்
நல்ல செயல் எப்போதும் உலகில் தனக்கு ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும். - எமர்சன்

அச்சம்
பொய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சம்; வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மை. - நேரு

1 comment:

  1. sirantha thoguppu ..

    நேரமிருந்தால் என் வலைப்பூ பக்கம் வாருங்கள் ...அன்புடன் யாழினி வளன்

    ReplyDelete