Sep 20, 2019

படித்ததில்_பிடித்தது

மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக்க சமுதாயம் மறுக்கிறது,
விவசாயி என சொல்லிக் கொண்டு பெண் பார்க்க முடியல,
எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,
திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,
மணமேடைக்கு மண்கரை படிந்த என்னை வேண்டாம் என்றார்கள்,
எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம் திருமண நேரத்தில் வெளுத்துப் போனதே சாயம், இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...
விளைவித்தவன் பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன் இலட்சக்காரன்...!!
கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!!
இரு கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!!

*விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்*

No comments:

Post a Comment