Labels
- படிப்பினை குறிப்புக்கள் (66)
- வரலாறு (31)
- சிந்தனை துளிகள் (27)
- விந்தை உலகம் (17)
- பொதுஅறிவு (16)
- மருத்துவம் (13)
- தொழில்நுட்பம் (10)
- இஸ்லாம் (9)
- மின் புத்தகங்கள் (7)
- தமிழ் ஆடியோ புத்தகங்கள் (3)
Nov 15, 2015
அறிந்துகொள்வோம் 2
* ஆஸ்திரேலியாவில் இதய வடிவிலான பவழப்பாறை உள்ளது.
* லாப்ஸ்டர் என்ற கடல்வாழ் உயிரியின் பல் அதன் வயிற்றில் உள்ளது.
* உடல் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் வரை ஒட்டகத்துக்கு வியர்க்காது.
* டால்பினால் தன்னைத் தானே கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
* அமெரிக்க 100 டாலர் நோட்டில் உள்ள கடிகாரம் காட்டும் நேரம் 4:10.
* உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி பேட்டரி உருவாக்க முடியும்.
* பச்சோந்திகளால் 20 வினாடிகளுக்குள் நிறம் மாறிக்கொள்ள முடியும்.
* பனிக்கட்டியில் ஏறக் குறைய 90 சதவீதம் காற்றுதான்!
* அந்துப்பூச்சிகளால் ஒன்றையொன்று பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் மோப்பம் பிடித்து அறிய முடியும்!
* அலிகேட்டர் முதலைகளால் 80 ஆண்டுகள் வாழ முடியும்.
* சில நத்தைகள் 3 ஆண்டுகள் தாண்டியும் உறங்கிக்கொண்டே இருக்கும்.
* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது.
* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்!
* கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில் மலர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மலர்.
* நம் உடலின் 10 ஆயிரம் செல்களை ஒரே ஒரு குண்டூசி முனையில் நிரப்பி விடலாம்!
* மூளை அனுப்பும் செய்திகள் நரம்புகள் வழியாகப் பயணிக்கும் வேகம் மணிக்கு 312 கிலோமீட்டர்.
* இந்த நொடியில் உங்கள் வாயில் 10 லட்சத்துக்கும் அதிக பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன!
* கரப்பான்பூச்சிகளால் நீருக்கடி யிலும் 15 நிமிடங்கள் தாக்குப் பிடித்து உயிர்வாழ முடியும்.
* 5 ஆயிரம் ஆண்டுகள் வயதான பிரமிடுகள் மட்டுமல்ல... அதே வயதான மரமும் பூமியில் உள்ளது.
* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.
* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்!
* ஒரே இரவில் வௌவால் 3 ஆயிரம் பூச்சிகளைக்கூட தின்னும்.
* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
* 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை நிறுத்துவதில்லை.
* ஆண் குதிரைக்கு 40 நிலையான பற்கள் இருக்கும். பெண் குதிரைக்கு 36லிருந்து 40 வரை.
* உலகிலேயே அதிக முறை பாடப்பட்ட பாடல்: ‘ஹேப்பி பர்த்டே டூ யூ!’
* உலக மக்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் தொலைபேசியைப் பயன்படுத்தியதே இல்லை!
* நெதர்லாந்தில் நீர் நிலைக்குக் கீழே சுரங்கக் கீழ்பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெறுகிறது.
* தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.
* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.
* நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
* ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.
* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!
* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.
* ஓட்டகத்தைக் காட்டிலும் சில எலிகளால் அதிக நாட்கள் நீரின்றி வாழ முடியும்.
* கிளியின் அறிவு 5 வயது குழந்தைக்கு ஒப்பானது!
* காகங்கள் தங்களை தொந்தரவு செய்யும் மனித முகங்களை நினைவு வைத்துக் கொள்ளும்!
* மேன்டிஸ் பூச்சியினால் அதன் தலையை அனைத்துப் பக்கங்களிலும் திருப்ப முடியும்
* எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும்.
* காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும்.
* உடலை குளிர்விப்பதற்காக முன்னங்காலை நக்கும் பழக்கம் கங்காருகளுக்கு உண்டு.
* நெருப்புக்கோழியின் கண்கள் அதன் மூளையை விடப் பெரியது!
* கோலா விலங்குகள் ஒரு நாளில் 4 மணி நேரம் மட்டுமே விழித்திருக்கின்றன.
* சில பனிச்சறுக்கு வீரர்கள் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுண்டு.
* 2004ம் ஆண்டு வரை, சிங்கப்பூரில் ‘சூயிங் கம்’ தடை செய்யப்பட்டிருந்தது.
* பனிச்சிறுத்தைகளால் கர்ஜனை செய்யவோ, பேரொலி எழுப்பவோ முடியாது.
* பெண் தேனீக்கள் மட்டுமே கொட்டும்.
* சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் கண்கள் அதன் இறக்கைகளில் உள்ளன.
* நாம் பேசும்போது 72 வெவ்வேறு தசைகளைப் பயன்படுத்துகிறோம்.
* நமது உடலில் 96560 கிலோமீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்கள் உள்ளன.
* நாம் ஒவ்வொரு ஆண்டும் 4 கிலோ சரும செல்களை இழக்கிறோம்.
* ஆரஞ்சு பழங்களை விட ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.
* முதலையால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
* நாம் கனவு காணும்போது, உட[]லை நகர்த்த முடியா து .
* கிரிக்கெட் என்கிற வெட்டுக்கிளி வகை பூச்சி ஒரு நொடிக்கு எத்தனை முறை ஒலி எழுப்புகிறது என்பதைப் பொறுத்து, வெப்ப நிலையைக் கணக்கிட முடியும்.
* குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.
* கைரேகையைப் போலவே நாக்கின் ரேகைகளும் தனித்துவம் மிக்கவை.
* விண்கலத்தில் உருளைக்கிழங்குச் செடி வளர்த்து சோதனை செய்திருக்கின்றனர் விண்வெளி விஞ்ஞானிகள்.
* கிரிஸ்லி வகை கரடியால் குதிரைக்கு இணையான வேகத்தில் ஓட முடியும்.
* பால்வீதி மண்டலத்தைக் கடக்க வேண்டுமென்றால், ஜம்போ ஜெட் விமானத்துக்கே 120 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்..
* வியாழன் கோளில் 300 ஆண்டு களாகத் தொடரும் சூறாவளி, இன்னும் வலுவாக உள்ளது.
* பெரு நாட்டில் புத்தாண்டன்று மஞ்சள் வண்ண உள்ளாடை அணிந்தால் அதிர்ஷ்டம் என்பது நம்பிக்கை!
* கட்டுப்பாடற்ற வான்கோழிகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் கூட ஓடும்!
* உலகின் மிகச் சிறிய குரங்கின் உயரம் - ஒரு டூத் ப்ரஷ் அளவுதான்!
* விண்வெளி வீரர்களின் பாதத் தடங்கள் என்றும் நிலவில் நிலைத்திருக்கும். அவற்றை அழிக்க அங்கே காற்றில்லையே!
* அமெரிக்காவில் நிஜ ஃப்ளமிங்கோ பறவைகளை விட, பிளாஸ்டிக் பறவைகளே அதிகம்.
* பார்வைக்கு, மூளையின் மொத்த சக்தியில் மூன்றில் ஒரு பங்கு தேவைப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment