Oct 31, 2015

நம்பிக்கையாளர்களின் தலைவர்... உமர் (ரலி) வரலாற்றுக் குறிப்பிலிருந்து...

ஒருமுறை கொலைசெய்யபட்டவரின் மகன் பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார், குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது அதை திருப்பிகொடுத்த விட்டு மேலும் என் மகனை என் குடும்பத்தில்
யாராவது பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...
ஆனால் ......
தண்டனை வழங்கவேண்டியவர்
"இல்லை" இவர் நம்மை ஏமாற்றிவிட்டு தப்பிக்க பார்கிறார் என்கிறார்...
இவருக்கு ஒருவர் பொறுப்பேற்றுகொண்டால் நான்
இவர் போய்வர சம்மதிக்கிறேன் என்கிறார்...உடனே "அபு தர்" (ரலி) அவருக்கு தான் பொறுப்பு ஏற்பதாக சொல்கிறார் அப்போது உமர் (ரலி) , அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்கவேண்டும் நன்கு யோசித்துகொள்ளுங்கள் என அபுதரிடம் சொல்கிறார்... அபுதரும் தான் ஏற்றுகொள்வதாக சொல்கிறார்... தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கபடுகிறது மூன்றாவது நாள் அசர் தொழுகைக்கு முன்
வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடபடுகிறார்... இரண்டு நாட்கள் ஓடியது .... மூன்றாவது நாள் வந்தது அசர் தொழுகை நடைபெற்றது
எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில்
குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்... நேரம் செல்ல செல்ல ...... மக்கள் மத்தியில் சலசலப்பு... தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...
தண்டனைக்குரிய நபர்தான் வருகிறார்... வந்துவிட்டார்....
உமர் (ரலி),அவரிடம் நீர் ஏன் திரும்ப வந்தீர்...??? என கேட்கிறார் அதற்கு அவர் ""
முஹம்மது நபி (ஸல்) யின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர்
ஒருவர் தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார் ""என்று நாளை வரலாறு என்னை பழிக்கும் மேலும்... இங்கே தப்பிவிடலாம்
நாளை அல்லாஹ்விடம் இதைவிட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சுகிறேன் " என்றார்... அடுத்து "அபு தர்"ரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில்
அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்..??"
என்று கேட்டார் உமர்... உடனே அபூதர் (ரலி) "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ என அஞ்சினேன் " அதனால் தான் அல்லாஹ்
மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்... பின்னர் உமர்
சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்... வழக்குறைத்தவர்...
நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்...
"முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர் மன்னிக்கும்
மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என்மீது வருவதை நான்
விரும்பவில்லை" என்றார்... " இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ்
அனைத்தும் என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி -
நம்பிக்கையாளர்களின் தலைவர்... உமர் (ரலி) அவர்களின் வரலாற்றுக்
குறிப்பிலிருந்து...

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது, 

No comments:

Post a Comment