வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Nov 12, 2015

வரலாற்று படிப்பினைகள்

*சாக்ரடீஸின் வீடு கிரேக்க தத்துவ மேதை சாக்ரடீஸ், தாம் குடியிருப்பதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அது மிகவும் சிறியதாக இருந்தது. அவரைப் பார்க்க வந்த ஒருவர், சாக்ரடீஸிடம், ‘‘உலகம் புகழும் தத்துவ ஞானியான தாங்கள் இவ்வளவு சிறிய வீடு கட்டுகிறீர்களே, இது எப்படி போதும்?’’ என்று கேட்டார். ‘‘இந்தச் சிறிய வீட்டை நிரப்பும் அளவுக்காவது உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனது சந்தேகம்’’ என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவர் அதன் பிறகு பேசவே இல்லை!

*மாவீரன்
அலெக்சாண்டர் தன் போர் வீரர்களுடன் உலகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது பாலை வனம் ஒன்றை அடைந்தனர்.அப்போது அனைவரும் தண்ணீர் தாகத்தால் சோர்வடைந்தனர். அப்போது அந்த வழியே சில இறை தொண்டர்கள் சென்றனர்.அப்போது அலெக்சாண்டரை கண்ட அவர்கள் தங்களிடம் இருந்த குவளை தண்ணீரினை அவனுடைய தலை கவசத்தில் ஊற்றி கொடுத்து பருகுமாறு கூறினர்.அதற்கு அந்த மாவீரனோ என் தலைமையை நம்பி   எனக்காகவும் தங்கள் நாட்டுக்காகவும்  இவர்கள் என்னுடன் வந்து உள்ளனர்.எனவே இவர்களை விடுத்து  நான் மட்டும் தண்ணீரை பருகினால் அது தலைமைக்கு அழகல்ல,என்று கூறி தண்ணீரை பருக மறுத்து நன்றி கூறி  இறை தொண்டர்களிடம் இருந்து விடை பெற்றான்.இதை கண்ட போர் வீரர்கள் அட நம் மன்னர் நம்மை சிறப்பித்து விட்டார், என்று கூறி உற்சாகத்தில் தாகத்தை மறந்து போர் புரிந்து  வெற்றிகளை குவித்து அலெக்ஸாண்டரின் பாதங்களில் குவித்தனர்

அமெரிக்காவின் பிரபல கோடிஸ்வரர் ஒருவர் முதுமையிலும் கடும் உழப்பை மேற்கொண்டிருந்தார்.நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்பவர் அவர்.ஒரு முறை விமானத்தில் அவர் பயணம் செய்த போது பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர் அவரை வியப்புடன் பார்த்தார்.பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே இருந்தார்.உடனே அந்த இளைஞர் அவரிடம் அய்யா நீங்கள் ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்துளிர்கள்.இனியும் இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா என்று கேட்டார்.அதற்கு அந்த பெரியவர் தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல உயிரத்தில் பறக்க வைத்திருக்கிறார்.சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது சுலபமாக பறக்றது இல்லையா.அதான் விமானம்
மேலே எறிவிட்டது என்று விமானி
என்ஜின் ஐ   அணைத்துவிட்டால்  என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல தான்  வாழ்க்கையும் நாம் கடுமையாக   உழைத்து மேலே வந்து விட்டு,நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும் விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர் ராக்பெல்லர் ஆவார்.

No comments:

Post a Comment